2025 ஜூன் 07, சனிக்கிழமை

சிறுவன் மீது துஷ்பிரயோக முயற்சி: சிற்றூழியர் தலைமறைவு

Niroshini   / 2016 மார்ச் 02 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று ஆதார அரசாங்க வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவனை அங்கு பணியாற்றும் சிற்றூழியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ள சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை(01) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்படைய சிற்றூழியர் பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார்; தெரிவித்தனர்.

திங்கட்கிழமை (29) திகதி காய்ச்சல் காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்;ந்த சிறுவன் வைத்தியாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளான்.

இந்நிலையில், திங்கட்கிழமை இரவு குறித்த விடுதியில் பணியாற்றி வந்த குறித்த சிற்றூழியர், ஆசைவார்;த்தைக் காட்டி வைத்தியசாலையில் உள்ள 3 மாடிக்கு அச் சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பி ஓடிவந்த சிறுவன் சம்பவம் தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

இது தொடர்பில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த சிற்றூழியரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .