2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

டைனமையிட் வைத்திருந்தவர்களுக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை சீனக்குடா பகுதியில், அனுமதிபத்திரமின்றி டைனமையிட் வெடி மருந்துகளை வைத்திருந்த இருவரை, இம்மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (2) உத்தரவிட்டார்.

மூதூர்,நெய்தல் நகர், பஹ்ரியா நகர் பகுதியைச் சேர்ந்த 27,42 , வயதுடைய இருவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள், அனுமதிப்பத்திரமின்றி இரண்டு அடி நீளமான டைனமையிட் குச்சியை, கடலுக்கு கொண்டு சென்ற போதே, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் தகவலின் அடிப்படையில், கைது செய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X