2026 மார்ச் 23, திங்கட்கிழமை

தபாரிப்பு பணம் செலுத்தாதவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2016 மார்ச் 13 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                    

திருகோணமலை கிண்ணியாவில்;, ஐந்து மாதங்களாக தாபரிப்பு பணம் செலுத்தாத ஒருவரை இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே சனிக்கிழமை (12)உத்தரவிட்டார்.  

கிண்ணியா, மஹ்ரூப்நகர் பகுதியைச் சேர்ந்த 34வயதுடைய ஒருவரே விளக்மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                          

தனது மூன்று பிள்ளைகளுக்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தி வந்த இவர், கடந்த ஐந்து மாதங்களாக தாபரிப் பணம் செலுத்தாததால் அவரது மனைவி  மனைவி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .