Princiya Dixci / 2021 மே 18 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, அன்புவளிபுரம் பிரதேசத்தில் 2 வயது மகனுடன் காணாமல் போன தாயாரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 077 2355 828 என்ற அலைபேசி இலக்கத்துக்கோ அறிவிக்குமாறு, பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.
சத்தியபிரதாப் ஆஷா என்ற இத்தாயாரும் அவரது மகனும் நேற்று மாலை 6.30 மணி முதல் காணாமல் போயுள்ளார்கள். இவர், யாழ்ப்பாணம் கைதடி இலங்கை வங்கியில் உதவி முகாமையாளராக உள்ளார்.
இவரை பல இடங்களில் உறவினர்கள் தேடியும் அவரைப்பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்காததையடுத்து, உப்புவெளி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனவே, இத்தாயார் குழந்தை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 077 2355 828 என்ற அலைபேசி இலக்கத்துக்கோ அறிவிக்குமாறு, பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கேட்டுள்ளனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026