2026 மார்ச் 19, வியாழக்கிழமை

திருகோணமலையில் கண்டனப் போராட்டம்

Editorial   / 2017 நவம்பர் 15 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம், எஸ்.சசிகுமார், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை தமிழ் இளைஞர்கள் மற்றும் இராவண சேனை அமைப்புகள் இணைந்து, மெய்கெய்சர் விளையாட்டரங்கத்துக்கு முன்பாகவுள்ள  டொக்கியாட் வீதியில் இன்று (15) நண்பகல்  1 மணிளவில் கண்டனப் போராட்டமொன்றை நடத்தினர்.

திருகோணமலை  இந்துக் கல்லூரியில் அண்மையில் நடந்ததாகக் கருதப்படும் சம்பவமொன்றை திரிபுபடுத்தி, பாடசாலையின் நற்பெயருக்குக் கழங்கம் கற்பிக்கும் வகையில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் இனவாத ரீதியாக நடந்துகொண்ட அரசியல்வாதிகளைக் கண்டித்தும்,  அங்காங்கே முன்னெடுக்கப்படும் இனவாதம், மதவாதம் என்பவற்றைக் கண்டிக்கும் வகையில் இந்தக் கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .