Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம். கீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை மாவட்டத்தில், இவ்வருடம் 2,145 வீடுகளை, மக்கள் பாவனைக்குக் கையளிக்க உத்தேசத்துள்ளதாக, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் என்.திருக்குமார் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு தொட்கம் இவ்வாண்டு வரைக்கும் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக 8,001 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத்திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பக்குமார தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று (18) நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் முகாமையாளர் மேலும் தெரிவிக்கையில், இவ்வருடம் மாத்திரம் 78 மாதிரிக் கிராமங்களை உருவாக்கும் செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கவைக்கப்பட்டு, வேலைத்திட்டங்கள் நடைபெற்றுவருவதாகவும் இவற்றில் 2,145 வீடுகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 950 வீடுகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் இவ்வருட இறுதிக்குள் மிகுதியுள்ள அனைத்து வீடுகளும் மக்களிடம் கையளிக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த மாதிக் கிராமங்களுக்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 116 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் இரு மாதிரிக் கிராமங்கள் கையளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago