Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
“தேசிய தலைவர் போட்டி ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமானது” என ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.
மூதூரில் நேற்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற மூதூர் பிரதேசத்துக்கான உயர்பீட தெரிவின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களாகிய உங்களின் தியாகங்களின் மூலமாகவே இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தின் பயனை நாம் முழுமையாக அனுபவிக்கின்றோமா என கேட்டால் இல்லை என்றே கூறவேண்டும். மஹிந்த அரசாங்கம் அதிகாரத்தின் உச்சத்தில் காணப்பட்ட வேளை அவ்வரசாங்கத்துக்கெதிராக பல மிரட்டல்களுக்கும் உயிரச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம்.
ஆனால் ஆட்சி மாற்றத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் வந்து சேர்ந்தவர்கள் ஆட்சி மாற்றத்துக்கு உரிமை கூறி அதன் பயனை அனுபவிக்கிறார்கள். ஏன் ஜனாதிபதி நாடாளுமன்ற தேர்தல்களில் அரசாங்கத்தை விமர்சித்து மஹிந்தவை ஆட்சிபீடம் ஏற்ற முற்பட்டவர்கள் இன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், எமது கட்சி ஆதரவாளர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டு வருவதை யாராலும் மறுக்க முடியாது. நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கமொன்றை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் நாம் தொடர்ந்தும் தியாகம் செய்துவருகின்றோம்.
இதற்கான ஒரே தீர்வு ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கமொன்றை அமைப்பதாகும். இதனை இலக்காக கொண்டே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் கட்சி மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் இளம் தலைவர்களுக்கு கட்சியின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. சிரேஸ்ட தலைவர்களின் வழிகாட்டலில் கிராம மடத்திலிருந்து கட்சி மறுசீரமைக்கப்பட்டு கட்சியை பலப்படுத்தப்படும். இதன்மூலம் கட்சி ஆரம்பித்ததிலிருந்து 1994ஆம் ஆண்டு வரை பல தலைவர்களை இழந்து நாட்டுக்கு சேவையாற்றி வரும் ஐக்கிய தேசிய கட்சியின் இளம் தலைவர்கள் உருவாக்காப்படுவார்கள்” என்றார்.
“அரச திணைக்களங்களில் பணிபுரியும் பல அதிகாரிகள் எமது வேண்டுகோளுக்கு உரிய பதில் அளிப்பதில்லை. ஆட்சி மட்டுமே மாறியிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் யாரும் மாறவில்லை.இதற்கு காரணம், பல மஹிந்த ஆதரவாளர்கள் இன்னும் அவருக்கான விசுவாசத்தை காட்டுவதே ஆகும்.
அத்தோடு, எமது மாகாணத்தை பொறுத்த வரை முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கே ஓங்கியிருக்கிறது. மாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களில் அவர்களின் ஆதரவாளர்கள் கடமையாற்றுவதாகும்.
சிலவேளைகளில், மாகாண சபையின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை மதிக்காத நிலை நாட்டின் பல பகுதிகளில் காணப்படுகிறது. இதனை தடுப்பதற்கான சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.
இருந்தாலும், கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை ஏற்படுத்துவதன் மூலமே இதற்கான நிரந்தர தீர்வை பெறமுடியும். தற்போதைய சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமான நிலையே காணப்படுகிறது. இங்கு தேசிய தலைவர் என்ற நாமத்துக்கு இருவர் முட்டி மோதிக்கொள்கின்றனர். ஆகவே விரைவில் கிழக்கு மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுபாட்டுக்குள் வரும்” என தெரிவித்தார்.
“சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகளானது, நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என தெற்கில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது. யுத்தம் முடிந்த நாடு ஒன்றில் ஆயுதங்கள் மீட்கப்படுவது வழமையான நிகழ்வாகும்.
கடந்த ஆட்சி காலத்தில் பல பகுதிகளில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்போது இல்லாத பாதுகாப்பு அச்சுறுத்தல் இப்போது மட்டும் எவ்வாறு ஏற்பட்டது. ஆனால் யுத்தத்தின் பின் மீட்கப்பட்ட புலிகளின் தங்கம் எங்கே என கேட்டால் விடை கூற யாருமில்லை.
அண்மையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிராக முறைப்பாடு செய்ய ஜெனீவா சென்றார்கள். அவர்களது ஆட்சிகாலம் முழுவதும் ஜெனீவாவை தூற்றியவர்கள், இன்று ஜெனீவா சென்று வெள்ளையர்களின் காலில் மண்டியிட்டுள்ளனர். இந்த கோமாளித்தனத்தை இனியாவது விட்டுவிட்டு மக்களுக்கு சேவையாற்றுமாறு இவர்களுக்கு கூறிக்கொள்ளவிரும்புகிறேன்” எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago