2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

நீர்ப்பிரச்சினையை போக்குவதற்கு நடமாடும் சேவை

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலையில் நிலவிவரும் குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி (புதன்கிழமை ) இடம்பெறவுள்ளது.

காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை மாகாண நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதேச சேவை நிலையத்தில் இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

நீர்ப்பிரச்சினை தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து தீர்வுகளை பெற்றுக் கொள்ள விரும்புவோர் உடனடியாக தங்கள் பிரச்சினைகளை நேரடியாகவோ தபால் மூலமோ அல்லது தொலைநகல் 0262225383 மூலமாகவோ நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதேச சேவை நிலையத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அன்றைய தினம் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அமைச்சர், பணிப்பாளர்கள், நிறைவேற்றதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .