Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் 87 கிலோகிராம் பன்றி இறைச்சியை சிறிய ரக வாகனமொன்றில் கொண்டுசென்றதாகக் கூறப்படும் இரண்டு பேரை இன்று புதன்கிழமை அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், பன்றி இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.
திரியாய் -கள்ளம்பத்த வீதியினூடாக சென்றுகொண்டிருந்த குறித்த வாகனத்தை இடைமறித்துச் சோதனையிட்டபோது, அதில் பன்றி இறைச்சி இருந்தமை தெரியவந்துள்ளது.
கோமரங்கடவெல, கிவ்லகட பகுதியைச் 45, 41 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago