Editorial / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, வெள்ளைமணல் வட்டாரத்துக்குட்பட்ட பயனற்று கிடக்கும் பல பொதுக் கிணறுகளை, மக்களின் ஆலோசனைக்கும் வேண்டுகோளுக்கும் அமைவாக திருத்தம் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
பட்டிணமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட பல பொதுக் கிணறுகள் பயனற்று காணப்படுகிறது. அதில் மக்கள் பாவனைக்கு தேவையான பொதுக்கிணறுகளை திருத்தம் செய்து வழங்க வேண்டும் என்று, பட்டிணமும் சூழலும் பிரதேச சபையில் முஹம்மட் நௌபர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன் முதல் பணியாக, நீரோட்டுமுனை கிராமத்தில் இருக்கும் பல்லின சமூகம் பயன்படுத்தும் பொதுக் கிணறை திருத்தம் செய்யும் பணிகள், இன்று (23) ஆரம்பமானது. இதை, பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் நௌபர் பார்வையிட்டு, மக்கள் பாவனைக்கு விடுவதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
3 hours ago