2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பஸ்சில் மோதுண்டு சிறுவன் பலி

Editorial   / 2017 நவம்பர் 10 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி யின் மஹதிவுல்வெவ  பகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம்-சாவகச்சேரி பேசாலை பகுதியைச்சேர்ந்த நகுலன் தசுதரண் (07) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ்சில் மோதுண்டே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து பொலிஸார் பஸ் சாரதியை கைது செய்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X