2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பஸ் விபத்து; இருவர் காயம்

Princiya Dixci   / 2021 மே 03 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதியின் பம்மதவாச்சி பகுதியில் பஸ்ஸொன்று, இன்று (03) அதிகாலை 4 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்கு பிரதான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதென, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X