எப். முபாரக் / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சம்பூர் பகுதியில் பாடசாலை மாணவனைத் தாக்கிய சந்தேகநபர்கள் மூவரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.
சந்தோசபுரம், கடற்கரைச் சேனை, மூதூர் பகுதிகளைச் சேர்ந்த 24,25, 22 வயதுகளையுடைய மூவரே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காதல் பிரச்சினை காரணமாக, க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவனை, மேற்படி சந்தேகநபர்கள் தாக்கியுள்ளனரென, பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, மூவரும் கைதுசெய்யப்பட்டு, மூதூர் நீதிமன்றத்தில் நேற்று (18) ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
15 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
43 minute ago
2 hours ago