எப். முபாரக் / 2018 மார்ச் 15 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் மன நோயால் பாதிக்கப்பட்ட 30 வயதுப் பெண்ணை, வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரை, 7 வருடங்கள் கட்டாயச் சிறைதண்டனையும் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் நட்டஈடும் அத்தொகையைச் செலுத்தத் தவறும் பட்டத்தில் மேலும் இரண்டரை வருடங்கள் சிறைதண்டனையும் விதித்து, திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிவான் பிரேம சங்கர் உத்தரவிட்டார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர், மேற்படி பெண்ணின் வீட்டில் இடம்பெற்ற இச்சம்வம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக இனங்கண்ட புல்மோட்டை, இந்திவெவ, மகேசன்புர பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவருக்கே, நேற்று (14) இந்தச் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025