Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள பேக்கரியின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம், நேற்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.
மாளிகைக்காடு, கல்முன பிரதான வீதியிலுள்ள தனது பேக்கரியை, வழமைபோல இரவில் மூடும் உரிமையாளர் அன்றையதினமும் மூடிவிட்டு, பேக்கரிக்கு அடுத்த நாள் காலை வந்துள்ளார்.
இதன்போது, பேக்கரியின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்த மேசை இலாச்சியில் வைத்திருந்த ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டிந்ததாகவும் பேக்கரி உரிமையாளர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago