2025 மே 21, புதன்கிழமை

பெண் சிசுவின் சடலம் மீட்பு

Thipaan   / 2016 ஜூன் 01 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

இலங்கை போக்குவரத்துச் சபையின் மூதூர் சாலைக்கு முன்னாலுள்ள களப்புப் பகுதியிலிருந்து, பெண் சிசுவொன்றின் சடலத்தை, இன்று(01) மீட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

உரப்பையில் போடப்பட்டு, குறித்த சடலம் வீசப்பட்டுள்ளதாகவும் தமக்குக்  கிடைத்த  தகவலையடுத்து, அச்சடலத்தை மீட்டுள்ளதாவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்பொழுது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .