2026 மார்ச் 23, திங்கட்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

Suganthini Ratnam   / 2016 மார்ச் 25 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைக்கரையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரை  இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இவர்களின் மூன்று உழவு இயந்திரங்களையும் ரிப்பர் வாகனமொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் வாகனச் சாரதிகள் என்பதுடன், அவர்களை பொலிஸ் பிணையில் விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .