Janu / 2025 நவம்பர் 30 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டம் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை உடைப்பெடுத்துள்ளது.மகாவலி கங்கையின் நீர்வரத்து இப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்தமையை அடுத்து இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வெருகல்,ஈச்சிலம்பற்று,மூதூர்,சேருவில பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியுள்ளது.சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
எனினும் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களாக தாழ் நில பிரதேசங்களில் வாழ்ந்த பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பான அனர்த்த பாதுகாப்பு நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.கீதபொன்கலன்




8 hours ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
01 Feb 2026
01 Feb 2026