Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
புலம்பெயர் உறவுகள், மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்க வேண்டுமென, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்டுத்தப்பட்டவர்களின் ஒன்றியத்தின் தலைவர் இன்பராஷா தெரிவித்தார்.
எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு, சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் போராளிகளே, இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
எதிர்வரும் 19ஆம் திகதி புலம்பெயர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் கௌரவிப்பு நிகழ்வை, எமது அமைப்பு வரவேற்பதாகவும் தாயகத்தில் உள்ள மாவீரர் குடும்பங்களையும், முன்னாள் போராளிகளையும் கௌரவிப்பதற்கான ஏற்பாடுகளையும் புலம்பெயர் உறவுகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025