2026 மார்ச் 23, திங்கட்கிழமை

முதிரைமரக்குற்றிகளை கொண்டுசென்றவருக்குத் தண்டம்

Thipaan   / 2016 ஜனவரி 02 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை, கந்தளாயில் கடந்த வருடம் அனுமதிப்பத்திரமின்றி எட்டு முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு, ஐம்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து, கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவன் திஸாநாயக்க, நேற்று வெள்ளிக்கிழமை(01) உத்தரவிட்டார்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த முகம்மட் சபீக் வயது (28) என்பவருக்கே தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கந்தளாயிலிருந்து கிண்ணியாவுக்கு அனுமதிப்பத்திரமின்றி எட்டு முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற போது கந்தளாய் போக்குவரத்துப் பொலிஸார் கைதுசெய்யப்பட்டடிருந்தார்.

குறித்த நபருக்கேதிராக கந்தளாய் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தநிலையிலேயே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .