2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மான் இறைச்சியை வைத்திருந்தவருக்கு சரீரப் பிணை

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

சட்ட விரோதமான முறையில் மான் இறைச்சியை விற்பனை செய்த   திருகோணமலை,கோமரங்கடவெல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில்  செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத் நேற்று(13) மாலை உத்தரவிட்டார்.

கோமரங்கடவெல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த நபரின் வீட்டை   சோதனைக்குட்படுத்திய போது அவரிடமிருந்து நான்கு கிலோ கிராம் மான் இறைச்சியை கைப்பற்றிய  பொலிஸார் குறித்த நபரையும் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .