Suganthini Ratnam / 2016 ஜனவரி 12 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
மின்மானியில் திருட்டு வேலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 40 வயதுடைய ஒருவரை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஹயான் மீஹககே, திங்கட்கிழமை (11) உத்தரவிட்டார்.
திருகோணமலை மின்சார ஊழியர்களும் உப்புவெளி பொலிஸாரும் இணைந்து உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்றுப் பகுதியில் மேற்கொண்ட திடீர்ச் சோதனையின்போது, வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மானியில் சூட்சுமான முறையில் சிறிய வகை கம்பியொன்றைச் செருகி மீற்றர் சுழழாத வகையில் திருட்டு வேலை செய்திருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவ்வீட்டு உரிமையாளரான மேற்படி நபர் ஞாயிற்றுக்கிழமை (10) கைதுசெய்யப்பட்டிருந்தார்.
4 minute ago
38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
38 minute ago
43 minute ago