2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மூன்று ஆடுகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                      

அனுமதிப்பத்திரமின்றி முச்சக்கரவண்டியொன்றில் மூன்று ஆடுகளை கொண்டுசென்றதாகக் கூறப்படும் இருவரை செவ்வாய்க்கிழமை (01) இரவு கைதுசெய்ததுடன், இந்த ஆடுகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியாவூடாக திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த இந்த முச்சக்கரவண்டியை இடைமறித்து வீதிப் போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, முச்சக்கரவண்டியில் ஆடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.                

முச்சக்கரவண்டிச் சாரதியொருவரும் அவரது உதவியாளருமே கைதுசெய்யப்பட்டனர்.

இந்த சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .