2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மூன்று மதுபானசாலைகளையும் மூடுமாறு கோரிக்கை

Gavitha   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

ஆலையடிவேம்பு பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள மதுபானசாலைகள் மூன்றையும் மூடிவிட நடவடிக்கை எடுக்குமாறு சிவில் பாதுகாப்புக் குழுக்களின் அங்கத்தவர்கள், பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுடனான வருடத்தின் முதலாவது பிரதேசமட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை (26) அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜமீல் தலைமையில் ஆலையடிவேம்பில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, அதிகரித்துவரும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழு உறுப்பினர்கள் வழியுறுத்தினர்.

இந்த கோரிக்கைக்கு பதிலளித்த பிரதேச செயலாளர், மதுபானசாலைகளை மூடுவதற்கான அதிகாரம் தனக்கு எப்போதும் வழங்கப்படவில்லையெனவும் அது மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அரசினால் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டு நடத்தப்படும் இவ்வாறான மதுபானசாலைகளை மூடுவதற்கான எவ்விதக் கட்டளையையும் சட்டரீதியாகத் தன்னால் பிறப்பிக்கமுடியாதெனவும் அதுபோலவே அங்கு மதுபானத்தைக் கொள்வனவு செய்பவர்களைப் பொலிஸாராலும் கைது செய்யமுடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதை மாத்திரமே தன்னால் செய்யமுடியும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .