Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நேற்று (05) இரவு மோட்டார் சைக்கிளும் தண்ணீர் ஏற்றிச்சென்ற பவுசரும் மோதியதில், மூவர் படுகாயமடைந்தனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளானவர்கள், புடவைக்கட்டு, செந்தூர் பகுதியைச் சேர்ந்த ஜ.நிப்ராஸ் (வயது 26), ஏ.ஆர்.பௌசுல் (வயது 45), ஏ.எம்.அஸாம் (வயது 20) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மூவரும், குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனரென, குச்சவெளிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .