2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

298 கிலோகிராம் தங்கூசி வலைகளுடன் ஒருவர் கைது

Thipaan   / 2016 நவம்பர் 11 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாங்கேணி பகுதியில் ஹாட்வெயார் விற்பனை நிலையமொன்றிலிருந்து, 298 கிலோகிராம் தங்கூசி வலைகளை, கிண்ணியா பொலிஸாரின் உதவியுடன் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமான வலைகளை ஹாட் வெயார் நிலையத்தில் வைத்து விற்பனை செய்வதாக கடற்றொழில் திணைக்களத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பொலிஸாருடன் இணைந்து சோதனையிட்ட போதே, 298 கிலோகிலோகிராம் தங்கூசி வலைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

கிண்ணியா, குறிஞ்சாங்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .