2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

'தனிநபர் பிரேரணைகள் மூன்று சமர்ப்பிக்கப்படும்'

Thipaan   / 2016 ஜூன் 20 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.முபாரக், பதுர்தீன் சியானா

கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை செவ்வாய்கிழமை(21) நடைபெறவுள்ளது. இதன் போது, தனிநபர் பிரேரனைகள் மூன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுத்தலைவருமான ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.

முதலாவதாக, திருகோணமலை மாவட்டத்தின்  தோப்பூர், கிண்ணியா, நிலாவெளி, கும்புறுப்பிட்டி மற்றும் புடவைக்கட்டு போன்ற பிரதேசங்களில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் படைமுகாம்கள் அமைக்கப்பட்டு விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பான பிரேரணையையும், இரண்டாவதாக கிழக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்தினை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும், மூன்றாவதாக பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவது பற்றியும் பிரேரணைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .