2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

திருக்கோணேஸ்வரத்தில் விசேட வழிபாடுகள்

Niroshini   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

தேர்தல்கள் திணைக்களத்தின் 60 வருட பூர்த்தியையொட்டி விசேட வழிபாடுகள் திருக்கோணேஸ்வரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன.

இதன்போது,தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய திருக்கோணேஸ்வரத்துக்கு விஜயம் மேற்கொண்டு பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா,பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜ் மற்றும் திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருகோணமலை  தேர்தல் அலுவலகத்துக்கு விஜயம் செய்த  ஆணையாளர் தனது சேவைக்காலத்தில் தன்னுடன் கடமையாற்றி ஓய்வுபெற்ற அலுவலகர்களுடன்  கலந்துரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .