Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார், பதுர்தீன் சியானா
திருகோணமலையை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்ற 30 ஆண்டு திட்டம் ஒன்றினை 2011ஆம் ஆண்டில் அரசு திட்டமிட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று செயற்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு வடமத்திய மாகாண அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, மாத்தளை தம்புள்ளை உட்பட பல மாவட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளது என முன்னாள்; நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பான கருத்தறிவதற்கான தமிழ் மக்கள் பேரவையின் ஆலோhசனை கூட்டம், இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை தபால் நிலைய வீதியில் உள்ள குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'எதிர்வரும் 2030ஆம் ஆண்டில் திருகோணமலையின் சனத்தொகை 10 இலட்சம் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலைகள், தொழில்நுட்ப நிலையங்கள் முதலியனவற்றிற்கு தெற்கில் இருந்து பெரும்பான்மையின மக்களை குடியேற்றி திருகோணமலையின் துறைமுகத்தை மையமாக வைத்து பல அபிவிருத்தி திட்டங்களையும் தொழிற்சாலைகளையும் அமைத்து தழிழர்களை அரிதாக்கும் திட்டம் அது. அவ்வாறான திட்டங்களை தடுக்கக் கூடிய தீர்வுகளை நாம் முன் வைக்கவேண்டும.; தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைமை பாத்திரத்தை வகிக்கும் இரா.சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பிய இந்த மாவட்டத்தின் இவ்வாறான நிலையை நாம் சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
6 hours ago
07 Jun 2025