2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மணல் ஏற்றிய மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                    

திருகோணமலை, சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கைப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றியதாகக் கூறப்படும் மூன்று பேரை இன்று புதன்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மூன்று உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மணல் ஏற்றியமை தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த பகுதிக்குச் சென்று சுற்றிவளைப்பு மேற்கொண்டே இந்தச் சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், பொலிஸார் வருவதைக் கண்ட சந்தேக நபர்கள் மணல் ஏற்றப்பட்ட உழவு இயந்திரத்தை அவசரமாக செலுத்த முற்பட்டபோது, உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து கங்கைக்குள் விழுந்துள்ளது.

இதன்போது, இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .