2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

8 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு

Niroshini   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை உணவு பாதுகாப்பு குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, 8 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கெதிராக வழக்கு தாக்கல்  செய்துள்ளனர்.

கிண்ணியா பகுதியில் 5 நிறுவன உரிமையாளர்களுக்கும் தம்பலகாமம் பகுதியில் 3 நிறுவன உரிமையாளர்களுக்கெதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக திருகோணமலை உணவு பாதுகாப்பு குழுவினர் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த வாரம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, தபால் நிலையத்துக்கு அண்மையில் உள்ள  5 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கெதிராக வியாழக்கிழமை(03)  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்போது,திருகோணமலை நீதவான் அவர்களை 25,000 ரூபாய் சரீர பிணையில் விடுவித்து வழக்கை  ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8