2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 22 மில்லியன் ரூபா பெறுமதியான வகுப்பறை கட்டிடம்

Super User   / 2013 நவம்பர் 27 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத், கியாஷ் ஷாபி


கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 22 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் மூன்று மாடிகளைக் கொண்ட நவீன வகுப்பறை கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது.

இந்த கட்டிடத்திற்காக பாடசாலைக்கு அருகாமையில் காணப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி அவசரமாக இக்கல்லூரிக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டே இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கல்லூரியின் அதிபர் நாதிரா அமீன் பாரி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. சேகு அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த காணியில் கிண்ணியா நகர சபையினால் விருந்தினர் விடுதி ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் இந்த விருந்தினர் விடுதியானது மகளிர் பாடசாலைக்கு அருகில் அமைவது கலாசாரத்தை சீர்கெடுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் விடுதி நிர்மாண பணிகளை முதலமைச்சர் நிறுத்தியதுடன் குறித்த காணியினை ஒரு மாத காலத்திற்குள் கிண்ணியா மகளிர் கல்லூரிக்கு பெற்றுத்தந்து அதில் பாடசாலைக்கு கட்டிடம் ஒன்றினையும் அமைத்துத் தருவதாக கடந்த நவம்பர் மாதம் 06ஆம் திகதி உறுதியளித்திருந்தார்.

முதலமைச்சரின் வாக்குறுதிக்கமைய 21 நாட்களுக்குள் குறித்த காணி கிண்ணியா மகளிர் கல்லூரிக்கு பெற்றுக்கொடுத்ததுடன் அக்காணிக்குள் 22 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூன்று மாடிகளைக் கொண்ட நவீன வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லினையும் இன்று நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .