2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அமரா் சிறி சபாரத்தினத்தின் 27ஆவது ஞாபகார்த்த நிகழ்வு

Super User   / 2013 மே 06 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட், வடமலை. ராஜ்குமார்


தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவா் அமரா் சிறி சபாரத்தினம் அவா்களின் 27ஆவது ஞாபகார்த்த நிகழ்வு இன்று திங்கட்கிழமை நாட்டின் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.

திருகோணமலையில் சுங்க வீதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட தலைமை காரியாலயத்தில்  இதனையொட்டி நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் ஆரம்பநிகழ்வான ஈகைச்சுடரினை திருகோணமலை மாவட்ட  செயலாளர் கு.ரவீந்திரராஜா ஏற்றிவைத்தார்.
மலரஞ்சலியினை திருகோணமலை நகர சபை உறுப்பினர் சி.நந்தகுமார் செலுத்தினார். இந்நிகழ்வின் தேசிய நிகழ்வு யாழ்ப்பானத்தில் உள்ள கோன்டாவில்  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவா் அமரா் சிறி சபாரத்தினம் அவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்ட அன்னங்கை ஒழுங்கையில் இடம்பெறுவதாகவும் திருகோணமலை நகர சபை உறுப்பினர் சி.நந்தகுமார் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழீழ விடுதலை இயக்க;த்தின் தலைவர் சிறி சபாரெத்தினம் அவர்களின் 27ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை காலை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் மன்னார் மாவட்டக் காரியாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.பற்றிக் வினோ தலைமையில் அனுஸ்ரிக்கப்பட்டது.

இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் சிறி சபாரெத்தினம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அனுவித்து  வணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் யேசுதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது சிறப்பு உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .