2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தனியார் வகுப்புகளை மாலை 6 மணியுடன் மூடுவதற்கு தீர்மானம்

Kogilavani   / 2014 மே 29 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை நகரசபை எல்லையின் கீழ் இயங்கும் பிரத்தியேக தனியார் வகுப்புக்களை மாலை 6 மணியுடன் மூடுவதற்கான பிரேரணை  நகரசபையில் புதன்கிழமை (28) நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை நகரசபையின் 38வது கூட்டத்தொடர் தலைவர் க.செல்வராஜா தலைமையில் புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கூடியது.

இதன்போது ஆளும்கட்சி உறுப்பினர் கோ.சத்தியசீலராஜா பிரேரணை ஒன்றினை கொண்டுவந்து உரையாற்றும் போது திருகோணமலை நகரில் கலாசார சீர்கேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

அத்துடன் எமது மாணவ சமூகம் வழிதவறிச் செல்வதற்கு மாலைநேர வகுப்புகளும் காரணமாக அமைவதால் மாலை 6.00 மணியுடன் தனியார் வகுப்புகளை நிறுத்த வேண்டும் எனவும் இதனை மீறும் தனியார் கல்வி நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இத்தீர்மானம் ஏகமனதாக சபையால் நிறைவேற்றப்பட்டது.

You May Also Like

  Comments - 0

  • SIVANATHAN Thursday, 29 May 2014 10:10 AM

    எத்தனை தனியார் கல்வி நிலையங்கள் உங்கள் அனுமதியுடன் இயங்குகின்றன..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .