2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிண்ணியா மத்திய கல்லூரியை 1000 பாடசாலைக்குள் உள்வாங்கவும்: முதலமைச்சர்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா மத்திய கல்லூரியை(தேசிய பாடசாலை)1000 பாடசாலைக்குள் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கல்வியமைச்சர்  பந்துல குணவர்த்தனவிடம் கோரிக்கைவிடுத்தார்.

சனிக்கிழமை கிண்ணியாவுக்கு விஜயம் செய்த கல்வியமைச்சர், கிண்ணியா மத்திய கல்லூரிக்கு(தேசிய பாடசாலை) வருகை தந்த அமைச்சர் இங்கு தற்போது நிhமாணிக்கப்பட்டுவரும் நிர்வாகக் கட்டடம் உட்பட பௌதீக வளங்களைச் பார்வையிட்டார்.

இப்பாடசாலையில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தேவையான நிதியினை பெற்றுத்தர ஆவண செய்வதோடு இப் பாடசாலையை ஆயிரம் பாடசாலைக்குள் உள்வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர், அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சருடன் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிஸாம்,கிண்ணியா வலயக ;கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .