2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அமைச்சர் மஹ்ரூபின் 16ஆவது நினைவு தினத்தையொட்டி முப்பெரும் விழா

Super User   / 2013 நவம்பர் 27 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் துறைமுகங்கள் கப்பற்றுறை இராஜாங்க முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் 16வது நினைவு தினத்தையொட்டி முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அல்ஹாஜ் எம்.ஈ.எச்.மஹ்ரூப் மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்த வைபவம் எதிர்வரும் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடைபெறும்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மஹ்ரூப் மன்ற தலைவருமான இம்ரான் மஹ்ரூப் தலைமையில் நடைபெறும் இவ்வைபவத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் மற்றும் மூதூர் வலய கல்வி பணிப்பாளர் விஜயானந்தமூர்த்தி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்தல், 16ஆவது நினைவு தினப் போட்டிகளில் வெற்றியடைந்தோருக்கான பரிசளிப்பு, "மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஈ.எச்.மஹ்ரூப் அவர்களின் கல்விப் பணிகள்" தொடர்பான நூல் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் இங்கு இடம்பெறவுள்ளன.

பட்டின சபை தலைவராக அரசியலுக்குள் நுழைந்த மர்ஹூம் மஹ்ரூப் 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்றம் நுழைந்தார். 1997ஆம் ஆண்டு அகால மரணமடையும் வரை தொடர்ந்து 20 வருடம் நாடாளுமன்ற அங்கத்துவத்தை இவர் பெற்றிருந்தார்.

மன்னார் மாவட்ட அமைச்சராகவும் துறைமுகங்கள் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றியுள்ள மர்ஹூம் மஹ்ரூப் பல்வேறு துறைகளிலும் அளப்பெரும் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .