2025 ஜூன் 28, சனிக்கிழமை

'சிசு சரிய' திட்டத்தின் கீழ் 200 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 01 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)

தூர இடங்களுக்கு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை கிண்ணியா தி/ குறிஞ்சாக் கேணி மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

'இனி கஷ்டமின்றி ஆரோக்கியமாக பாடசாலை செல்ல' எனும் தொனிப் பொருளில் தனியார் போக்குவரத்து அமைச்சும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இணைந்து 'சிசு சரிய' திட்டத்தின்கீழ் இத்துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தன.

கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாதுள்ளா கேட்டுக் கொண்டதற்கிணங்க இப் பிரதேச சபைக்கு 200 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

மாணவிகளுக்கான துவிச்சக்கரவண்டிகள் 100, மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் 100 என்ற அடிப்படையில் தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி.ரட்நாயக்காவினால் வழங்கப்பட்ட இத் துவிச்சக்கர வண்டிகள் கிண்ணியா பிரதேசசபைக்குட்பட்ட 20 பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாதுள்ளா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.என்.புஷ்பகுமார, கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து சபை தலைவர் கருணாரட்ன, கிழக்கு மாகாண வீதி
போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர் உதயகுமார், கிண்ணியா வலய கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.சீ.முனவ்வரா நளீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .