2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 31 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 14 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


இந்திய மீனவர்கள் 31 பேரையும் மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் ஏ.எச்.அஸ்ஹர் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆடி மாதம் 30 ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு கடற்பரப்பில்  4 படகுளில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  போது  கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

பல தடவைகள் இவர்கள் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்படுகின்ற நிலையில் அவர்களுக்கான விளக்கமறியல் ஒவ்வொரு முறையும் நீடிக்கப்பட்டது.

இவர்களுக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்திய மீனவர்கள் 31 பேரும் நீதிமன்றில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர்.

எனினும், கடற்படை உத்தியோகஸ்தர் நீதிமன்றுக்கு சமூகமளித்து இருக்கவில்லை. இதனால் நீதவான் இம்மீனவர்கள் 31 பேரையும் 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் வழக்கை ஒக்டோபர் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை, மீனவர்களின் நலன்களைக் கவனிக்க கொழும்பில் உள்ள இந்தியத்தூதுவராலயத்தின் கவுன்சிலர் என்.எம்.கிருஷ்ணா நீதிமன்றிற்கு  சமூகமளித்திருந்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .