Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
தீஷான் அஹமட் / 2019 மார்ச் 25 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராம மக்கள் எவருக்கும் கடந்த 10 வருடங்களாக சமுர்த்தி உணவு முத்திரை வழங்கப்படவில்லையெனக் கவலை தெரிவிக்கின்றனர்.
யுத்தம் காரணமாக 2006ஆம் ஆண்டு, இக்கிராம மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்து, மட்டக்களப்பு நலன்புரி முகாமில் இருந்து, மீண்டும் 2008 ஆம் ஆண்டு, தமது கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
மீள்குடியேறி 10 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமது கிராமத்தில் எவருக்கும் இதுவரையில் சமுர்த்தி உணவு முத்திரை வழங்கப்படவில்லையென, இக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கூழித் தொழிலையும் விறகு சேகரித்தலையும் பிரதானமாகக் கொண்ட இவர்கள் தமக்கான உணவு முத்திரை வழங்க வேண்டுமெனத் தெரிவித்து, பல்வேறுபட்ட ஆர்ப்பாட்டங்கள், மகஜர் கையளிப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் இதுவரை அவை, சம்மந்தப்பட்டவர்களால் கவனத்தில் கொள்ளப்படவில்லையெனவும், அவர் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, இது தொடர்பில், திருகோணமலை மாவட்ட அரசியல் தலைமைகளும் அரச அதிகாரிகளும் கவனம் செலுத்தி, பாட்டாளிபுரம் கிராம மக்களுக்கு, சமுர்த்தி உணவு முத்திரையைப் பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025