2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

20 மீனவர்களும் சரீர பிணையில் விடுதலை

Kogilavani   / 2014 மே 29 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, கோணேஸ்வரம் கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பியில் ஈடுபட்ட 20 பேரையும் தலா 50 ரூபா சரீர பிணையில் விடுவித்துள்ளதுடன் இவர்களை எதிர்வரும் ஜுன் மாதம் 30 திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் ஈ.சரவணராஜா வியாழக்கிழமை (29) தெரிவித்தார்.

மேற்படி 20 பேரும் புதன்கிழமை(28) கோணேஸ்வரம் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு துறைமுக பொலிஸாரிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.   இவர்களிடமிருந்து 3 மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இப்படகுகள்  திருகோணமலை டொக்கையாட் கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .