2025 மே 15, வியாழக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழுவின் திருமலை விஜயம்

Super User   / 2010 நவம்பர் 24 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

திருகோணமலை செல்லவுள்ள ஆணைக்குழு உறுப்பினர்கள் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சாட்சியங்களை பதிவு  செய்யவுள்ளனர்.

4ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மூதூர் பிரதேச செயலகத்தில் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது. அன்று மாலை சம்பூர் பிரதேசத்திற்கான விஜயத்தினை ஆணைக்குழு உறுப்பினர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை குச்சவெளி பிரதேச செயலகத்திலும் சாட்சிகளை பதிவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .