2025 மே 15, வியாழக்கிழமை

கிண்ணியாவில் சுற்றுலா நீதிமன்றத்தை மீள இயங்க கோரிக்கை

Super User   / 2011 ஜனவரி 29 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியாவில் சுற்றுலா நீதிமன்றத்தை மீள இயங்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு வள அபிவிருத்தி மையம் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நீதிமன்றம் கடந்த 1986ஆம் ஆண்டு வரை கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு முன்னாலுள்ள இடத்தில் இயங்கி வந்திருந்தது. எனினும் பயங்கரவாதம் காரணமாக மூடப்பட்டது.

1970ஆம் ஆண்டுகளில் கிராமக் கோடாக ஆரம்பிக்கப்பட்ட இந்நீதிமன்றம் 1980ஆம் ஆண்டுகளில் சுற்றுலா நீதிமன்றமாகத் தரமுயத்தப்பட்டது.

இரு வாரங்களுக்கு ஒரு முறை இந்த நீதிமன்றம் இயங்கியதால் இப்பகுதியிலுள்ள வழக்குகள் இங்கேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

தற்போது இந்நீதிமன்றமின்மையால் இப்பகுதி வழக்குகள் திருகோணமலை நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படுகின்றன. இதனால்  அங்கு சென்று வருவதில் பெரும்  சிரமங்களை பொதுமக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே கிண்ணியா சுற்றுலா நீதி மன்றத்தை நீதிவான் நீதிமன்றமாக தரமுயர்த்தி மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் கிழக்கு வள அபிவிருத்தி மையத்தினால் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .