2025 மே 15, வியாழக்கிழமை

வெள்ளத்தில் காணாமல் போன இருவர் முள்ளிப்பொத்தானையில் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில்  கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வெள்ளத்தில் காணாமல் போன இருவர் முள்ளிப்பொத்தானை வயல் நிலமொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கல்மெட்டியாவ தெற்கைச் சேர்ந்த (வயது 48)  எச்.எம்.டிக்கிரி பண்டா,  தம்பலகாமம் உல்பத்த  இடத்தைச் சேர்ந்த (வயது 22) சாலிய அசோக பியதாசா  ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களது சடலங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மீட்கப்பட்டது.

கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையையடுத்து,  சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .