2025 மே 14, புதன்கிழமை

பத்து வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவர் தலைமறைவு

Super User   / 2011 பெப்ரவரி 14 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை அபயபுர பகுதியைச் சேர்ந்த 45 வயதான சிவில் ஊழியர் 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முறைபாட்டினையடுத்து குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுமி தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் 2009ஆம் ஆண்டு சிறுமி ஒருவரின் கையை பிடித்ததாக திருகோணமலை நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .