2025 மே 14, புதன்கிழமை

முதலுதவி குழுக்களுக்கான செயலமர்வு

Kogilavani   / 2011 மார்ச் 13 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எப்.முபாரக்)

எதிர்வரும் மே மாதம் கிண்ணியாவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண அறிவியியல் கண்காட்சியில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள முதலுதவிக் குழுக்களுக்கான செயலமர்வு நேற்று சனிக்கிழமை கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
 
கிண்ணியா வலயக்கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களும் , 1ஏபி , 1சி வகை பாடசாலைகளில் இருந்து இதற்காக தெரிவு செய்யப்பட்ட 75 மாணவர்களும் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.
 
கிண்ணியா வலயக்கல்வி அலுவலக உடற்கல்விப்  பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.நஸீம் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் திருகோணமலை பொது வைத்தியசாலை மார்பு நோய் சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியர் என்.சுரேஸ்,  கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .