2025 மே 14, புதன்கிழமை

மீட்கப்பட்ட யானைக்குட்டி

Super User   / 2011 ஏப்ரல் 16 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பூநகர் எனும் இடத்தில் 6 மாதம் மதிக்கத்தக்க  யானைக்குட்டி ஒன்று   நேற்று வெள்ளிக்கிழமை  மாலை  மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச வாசிகள் வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கி தகவலை அடுத்து சேற்றில் சிக்கிய நிலையில் இருந்து இந்த யானை மீட்கப்பட்டது. தற்போது கந்தயாயில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அலுவலகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.

நாளை ஞாயிற்றுக்கிழமை  இந்த யானைக் குட்டி உடவளவ யாணைகள் சரணாயத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவித உணவையும் உட்கொள்ள தெரியாத நிலையிலுள்ள இந்த யானைக்குட்டிககு  பால்மா  வழங்கப்படுகின்றது. இதனைப் பார்ப்பதற்காக பொது மக்கள் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அலுவலகத்திற்கு சென்று வருகின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X