2025 ஜூலை 05, சனிக்கிழமை

சாம்பல்தீவு பாலத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது

Super User   / 2011 மே 16 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை சாம்பல்தீவு பாலத்துக்கு அருகாமையில் கடந்த வெள்ளிக்கிழமை  மீட்கப்பட்ட 40 வயதான பெண்ணின் சடலம், தனது தங்கையின் சடலம் என இறந்தவரின் சகோதரி அந்தோனியம் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்னர் இவர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும், இவர் மன நோயினால் பாதிக்கப்பட்வரென்றும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலை எடுத்துச் செல்லப்படவுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .