2025 ஜூன் 28, சனிக்கிழமை

முஸ்லிம்களை கௌரவமாக வாழ செய்கின்ற அரசே மஹிந்தவின் அரசு: அமைச்சர் றிசாட்

Super User   / 2012 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

இலங்கை முஸ்லிம்களை கௌரவமாக வாழ செய்கின்ற ஓர் அரசாங்கமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு வாணிபத்துறை தொழில் வாய்ப்பு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதின் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள இந்த அரசாங்கத்தினால் மாத்திரமே முதலமைச்சரை பெற முடியும். இதனை யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபை  தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு கிண்ணியா எகுத்தார் ஹாஜியார் வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கிண்ணியா நகர சபை தலைவரும் கிழக்கு மாகாண சபை  தேர்தல் வேட்பாளருமான டாக்டர் ஹில்மி மஹ்றுப் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

"தலைவர் ரவூப் ஹக்கிமிடம் கேட்டாலும் சரி, தலைவர் அதாவுல்லாவிடம் கேட்டாலும் சரி, பிள்ளையானிடம் கேட்டாலும் சரி அல்லது சம்பந்தன் ஐயாவிடம் கேட்டாலும் சரி இந்த அரசாங்கத்திடமே முதலமைச்சர் ஒருவரை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என கூறுவர். அதிகளவு வாக்குகளை பெறக்கூடிய ஒரு கட்டமைப்பு குறிப்பாக இந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டைப்புக்கு தான் உள்ளது. இந்த அரசாங்கத்திற்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என சிந்திக்கும் பலர் எங்களிடத்தில் இருக்கலாம்.

ஆனால் அரசாங்கத்தை தோற்கடித்து ஆட்சியை மாற்றுகின்ற ஒரு தேர்தல் இதுவல்ல. இந்த மாகாண சபை தேர்தல் இது ஒரு குட்டி தேர்தலாகும்.
ஆளும் கட்சியாக எந்தக் கட்சி உள்ளதோ அந்தக் கட்சிக்கே தான் இந்த சிறிய  தேர்தல்களில் மக்கள் வாக்களித்து வருவதை நாம் காண்கின்றோம்.
இந்த அரசாங்கத்திலுள்ள பங்காளி கட்சிகளில் முஸ்லிம்கள் சார்பாக எங்களுக்கு தனியான இடத்தை வைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த அரசு இந்நாட்டு முஸ்லிம்களை கௌரவமாக வாழ செய்கின்ற ஓர் அரசாங்கமாகும்.

இந் நாட்டில் சில சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஒரு தேரர் தம்புள்ளையில் தலைமை தாங்கி பள்ளிவாசலொன்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அரசில் இருந்து கொண்டு இதற்காக நான் வாயை மூடிக்கொள்ளவில்லை. நான் இது தொடர்பாக ஜனாதிபதியுடனும், அமைச்சரவையிலும் தன்னந்தனியாக குரல் கொடுத்தேன்.

இந்த மாதியான அநியாயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என 52 அமைச்சர்கள் மத்தியிலும் நான் எடுத்து பேசியுள்ளேன். இதை பற்றி நாடாளுமன்றத்தில் யாரும் பேசவில்லை.  இவ்வாறான செயற்பாடுகளை கீழ்த்தரமானவர்கள் செய்வதாக மிக வேதனையோடு சிங்கள உரிமை தலைவராக இருக்கின்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்க என்னிடத்தில் தெரிவித்தார்.

அத்துடன், பாதுகாப்பு செயலாளரிடம் இது தொடர்பாக பலமுறை பேசும் போது தைரியமாக இருந்து செயல்படுமாறு குறிப்பிட்டார். இந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் சரியான தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. துணிந்து செயல்பட தைரியமாக பேசுவதற்கு படைத்தவனுக்கு மட்டும் அஞ்சிப் பேசுவதற்கு ஒரு தலைமைத்துவம் தேவையாக உள்ளது" என்றார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக், வேட்பாளர் ஏ.எல்.அப்துல் றஸ்ஸாஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0

  • sharafdeen Sunday, 05 August 2012 06:58 PM

    தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்தின் சூத்திரதாரிகள் ஒருவர் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. முஸ்லிம்களை மஹிந்த அரசு கவ்ரவமாக வாழவைக்கிறதாம். நாங்க நம்பிட்டோம் சாமி.

    Reply : 0       0

    UMARDEEN Sunday, 05 August 2012 07:03 PM

    முஸ்லீம்களுக்கும், ப‌ள்ளீ வாசல்களுக்கும் செய்யப்படும் அநியாயம் தெரியவில்லயா .......? ஏன் பொய் சொல்லுகிறார். இந்த புனித றமழான் மாதத்தில் இவருக்கு என்ன கூலி அல்லா குடுப்பான்...? முதலில் முஸ்லிம்களுடய முக்கிய பிரச்சினையை எடுக்கச்சொல்லுங்கள் பின்பு தேர்தல் மேடயில் ஏறச்சொல்லுங்கள்.

    Reply : 0       0

    Thowfeek Sunday, 05 August 2012 11:40 PM

    அமைச்சு பதவி எனும் எலும்பு துண்டுகளுக்காக வாலாட்டும் சமூக துரோகிகள் இருக்கும் போது இலங்கையும் வெகு சீக்கிரத்தில் மற்றொரு பர்மாவாக மாறிவிடும் என்பதில் ஆச்சரியமில்லை...
    நாடு பூராக முஸ்லிம்கள் நசுக்கப்பட்டுகொண்டு வருவது எதுவும் தெரியாமல் இப்படி வக்காலத்து வாங்க இவர்களுக்கு மன சாட்சி என்பது அறவே இல்லையா?

    Reply : 0       0

    shanthan Monday, 06 August 2012 05:24 AM

    மூதூர் 3ம் கட்டை மலையில் புத்தர் சிலை இரவோடிரவாக வைத்தாகியது. தம்புல்லையில் பள்ளிவாசல் அகற்றப்படும் எனும் தொனி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோன்பு காலத் தொழுகைகளை நிம்மதியாக தொழ முடியாத காலகட்டத்தில்இகடந்த வருட நோன்பு கிரீஷ் பூதத்தால் கெட்டது. இந்த லட்சனத்தில் முஸ்லிம்கள் கவுரவமாக வாழ்கிறார்களா எங்கே ??????????

    Reply : 0       0

    Nassehaa Monday, 06 August 2012 06:05 AM

    அமைச்சரே.! அரசியல் தொழிலாளரே..!
    முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் இயங்குவதற்கு இலங்கையின் நாலா புறங்களிலும் அச்சுறுத்ததல் ஏற்பட்டிருக்கின்றதைப்பற்றி சிறிதளவேனும் அலட்டிக்கொள்ளாத மஹிந்தவின் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கும் தொழிலை உங்களைப்போன்ற அரசியல் தொழிலாளர்கள் எப்போது கைவிடப்போகின்றீர்கள். உங்களுக்கெல்லாம் வெட்கம் இல்லயா? பதவிக்காகவும், சொகுசுகளுக்காகவும் ஏன் மக்களை விலை பேசி விற்கின்றீர்கள். இலங்கை முஸ்லிம்கள் சுதந்திரமாக தமது சமய அணுஷ்டானங்களை முன்னெடுக்க முடியாமல் முட்டுக்கட்டையிடும் பேரினவாதத்திற்கொதிராக எது வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத உதவாக்கரை அரசாங்கத்தில்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று குருட்டுத்தனமாக கருத்துக்களைத் தெரிவித்து மக்களின் வாக்குகளை கொள்ளயடிக்கும் உங்களைப்போன்ற அரசியல் தொழிலாளர்களைப்பற்றி மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? மாற்று அரசியல் ஒழுங்கு குறித்து இலங்கை முஸ்லிம்கள் சிந்திப்பார்களா?

    Reply : 0       0

    pottuvilan Monday, 06 August 2012 07:33 AM

    முதலில் உங்களுக்கு மரியாதை இருக்கிறதா?

    Reply : 0       0

    Abal khair Monday, 06 August 2012 10:30 AM

    என் அன்புக்குரிய அமைச்சரே, மக்களை இன்னமும் முட்டாளாக்கலாம் என்று மனப்பால் குடிக்கின்றீர்கள், ஆனால் காலம் மாறிப்போச்சு.

    Reply : 0       0

    Mohamed Razmi Monday, 06 August 2012 11:31 AM

    ////. துணிந்து செயல்பட தைரியமாக பேசுவதற்கு படைத்தவனுக்கு மட்டும் அஞ்சிப் பேசுவதற்கு ஒரு தலைமைத்துவம் தேவையாக உள்ளது" என்றார்.////

    உங்களை விடவா சார்?


    உங்களை விடவா சார்?')">Reply :
    0       0

    ansar Monday, 06 August 2012 06:09 PM

    இது பொய்...

    Reply : 0       0

    Ruzan Monday, 06 August 2012 07:51 PM

    அமைச்சரே.!மக்களை இன்னமும் முட்டாளாக்கலாம் இல்லையா?

    Reply : 0       0

    S.Sinasudeen Friday, 24 August 2012 05:00 AM

    தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்தின் சூத்திரதாரிகள் ஒருவர் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. முஸ்லிம்களை மஹிந்த அரசு கௌரவமாக வாழவைக்கிறதாம். நாங்க நம்பிட்டோம் சாமி. முஸ்லிம்களுக்கும், ப‌ள்ளிவாசல்களுக்கும் செய்யப்படும் அநியாயம் தெரியவில்லயா...? ஏன் பொய் சொல்லுகிறார். இந்த புனித றமழான் மாதத்தில் இவருக்கு என்ன கூலி அல்லா குடுப்பான்...? முதலில் முஸ்லிம்களுடைய முக்கிய பிரச்சினையை எடுக்கச்சொல்லுங்கள் பின்பு தேர்தல் மேடையில்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .