2025 ஜூன் 28, சனிக்கிழமை

தலைப்பாகையை கட்டிவிட்டு சாரத்தை கழற்றிவிடுகிறார்கள்: மு.கா. வேட்பாளர் ஹஸன்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


இன்று இந்த நாட்டில் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு சலுகைகளைத் தந்துவிட்டு எங்கள் உரிமைகளைப் பறித்துகொண்டிருக்கின்றார்கள். சலுகை என்பது தலைப்பாகை மாதிரி. அந்த தலைப்பாகையை கட்டிவிட்டு கீழே உள்ள சாரத்தை கழட்டிவிட்டு விடுகின்றார்கள். எமக்கு எது முக்கியம்? தலைப்பாகையை மட்டும் கட்டிக்கொண்டு திரியலாமா? என கிழக்கு மாகாணசபை முன்னாள் முதல்வரும் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான மௌலவி எஸ்.எல்எம்.ஹஸன் (அஷ்ஹரி) கேள்வியெழுப்பினார்.

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளிப் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பும் இப்தார் நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 42 இலட்சத்திற்கும் அதிகமாக பெரும்பான்மையாக வாழும் சமூகம். இதில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் 6. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு. அங்கு எல்லாம் தமிழ் பேசுகின்ற அரசாங்க அதிபர்கள் இருக்கின்றார்கள். ஆனால் முஸ்லிம்கள் இரண்டு மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கின்றனர். அவை அம்பாறை, திருகோணமலை மாவட்டங்கள் ஆகும்.

உரிமைக்காக போராடவேண்டிய இனம்  முஸ்லிம்கள் ஆவர். எங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.

இன்று குச்சவெளிப் பிரதேசத்தில் முஸ்லிம் மக்களின் காணி எல்லைகள் யாவும்  மிகவும் சுருக்கிங்கொண்டு வருகின்றது என்பதை நாம் அறிவோம்.

கிண்ணியாவைப் பொறுத்தளவில் முஸ்லிம்களில்; 97 வீதமானோர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்த ஊருக்குள்ளே இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற முகப்பு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடைநிறுத்தி, உடைப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள் என்றால் எந்த அளவுக்கு நாம் ஸ்திரமில்லாத சமூகமாக  உறுதி அற்ற சமுதாயமாக இருந்துகொண்டிருக்கின்றோம்.

இன்று அரசாங்கத்தின் அராஜகத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். மூதூர் மூன்றாம் கட்டைப் பகுதியில் மலையை சூழ முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். அதற்கு அப்பால் தமிழ் மக்கள் கூடுதலாக காணப்படுகின்றனர். இங்கு சிங்களவர்கள் அறவே இல்லாத இந்தப் பகுதியில்  புத்தர் சிலையை ஏன் வைத்து அழகு பார்க்க வேண்டும்?

அரசாங்கத்தின் இப்படியான அராஜகமான செயல்கள் ஏராளம். 1930ஆம் கட்டப்பட்ட கருமலையூற்று பள்ளிவாசல் இப்பொழுது யாருமே போகமுடியாது. அமைச்சர்கள்  கூட உள்ளே சென்று பார்க்கமுடியாது. அந்த அளவு இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் எல்லோருக்கும் தெரியும். அதேபோல கொழும்பு கொம்பனித் தெருவிலோ, ராஜகிரியிலோ, தெஹிவளையிலோ அநூராதபுரத்திலோ, குருணாகலிலோ தொடர்ந்துகொண்டேபோகின்றது.

இங்கே கை வைக்கின்றார்கள். எங்கள் வணக்கஸ்தலங்களில் ஆனால் என்ன செய்கின்றார்கள் தெரியுமா? றோட்டைப் போட்டு தருகின்றார்கள். பாலத்தைக் கட்டித்தருகின்றார்கள். மின்சார வசதிகளை செய்து தருகின்றார்கள்.

இந்த அரசாங்கம் எங்களுக்கு சலுகைகளைத் தந்து எங்கள் உரிமைகளைப் பறித்துக்கொண்டிருக்கின்றார்கள். சலுகை என்பது தலைப்பாகை மாதிரி அந்த தலைப்பாகையை கட்டிவிட்டு கீழே உள்ள சாரத்தை கழட்டிவிட்டு உள்ளாடையை உடுத்தி விடுகின்றார்கள். எமக்கு எது முக்கியம்? தலைப்பாகையை மட்டும் கட்டிக்கொண்டு திரியலாமா?

ஆகவே எமக்கான போராட்டத்திற்கான உரிமை எமது வாக்குகள். சிறு கட்சிகளுக்கு போட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு பெரும்பான்மையினருக்கு சக்தியை கொடுக்கும் நாம் என்றுமில்லாதவாறு இன்று ஐக்கியபட வேண்டிய அவசியமும் அவசரமும் வந்துள்ளது' என்றார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  வேட்பாளர்களான பளீல் அமீர், சட்டத்தரணி லாஹீர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • jesmin Saturday, 11 August 2012 07:54 AM

    இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு வழங்கிய சலுகைகளை கொஞ்சம் பட்டியலிட்டு கூற முடியுமா. மாகாண சபையில் உங்களுக்கு வழங்கிய பதவி சலுககைக்குள் வருமா அல்லது உரிமைக்குள் வருமா. கொஞ்சம் விளக்கமாக பேசுங்களேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .