2025 ஜூன் 28, சனிக்கிழமை

திருமலை பொதுவைத்தியசாலைத் தாதி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலை பொதுவைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

திருகோணமலை பொதுவைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் தங்களது சீருடைக்கு  ஒப்பாக  சீருடை அணிவது தங்களுக்கு பாதிப்பை  ஏற்படுத்துவதாகவும் தாதிமார்களுக்கும் சிற்றூழியர்களுக்கும் வித்தியாசம் தெரியாது இருப்பதாகவும் தெரிவித்தே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனால்  நோயாளர்கள் பலத்த அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். 

கடந்த வெள்ளிக்கிழமையும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .